தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எஸ். அருணாச்சலாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தைகள் நியாயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சத்தி 21 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார், அதனைத் தொடர்ந்து, எஸ் அருணாச்சலபுரம் கிராமத்தில்  சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார், இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.