தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரூபாய் 2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் ராமச்சந்திராபுரம் முதல் லட்சுமிபுரம் வரை சாலை பணிகளையும் அதனை தொடர்ந்து, உபரி நிதியின் கீழ் ₹  22 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ராமச்சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.