தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள P.மீனாட்சிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையையும், அதனைத் தொடர்ந்து அதே கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.