விளாத்திகுளம் அருகே கீழக்கரந்தை கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  கீழக்கரந்தை  ஆதிதிராவிடர் காலணியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள  பயணியர் நிழற்குடை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கீழக்கரந்தை  ஊராட்சி மன்ற தலைவர் ,சுப்புலட்சுமி  புதூர்  ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர்  கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.