அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய நூலகத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்து, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்,  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தரராஜன், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.