தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயன்செங்கல்படை கிராமத்தில் SDRF24-25 திட்டத்தின் கீழ் ரூபாய் 34 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும் அதனை தொடர்ந்து,K. குமாராபுரம் கிராமத்தில்  SDRF24-25 திட்டத்தின் கீழ் 34 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், திமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், அயன் செங்கல்படை ஊராட்சி மன்ற தலைவர் தங்கமாள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளான பலர் கலந்து கொண்டனர்.