விளாத்திகுளம் அருகே கருப்பசாமி கோவில்பட்டி கிராமத்தில் புதிய நியாய விலை கடையை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளமுத்துராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பசாமி கோவில்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.அதனைத் தொடர்ந்து அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 20 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,கிராம பொதுமக்கள் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.