தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் மற்றும் வெங்கடாசலம், வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலாராணி, ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி,செல்வராஜ்இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.