தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 11, லட்சத்தி  97,000 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன்  கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.