தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டைமுன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் திமுக கழகக் கொடியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழ் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், காசி விஸ்வநாதன், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், அன்பு ராஜன், சின்ன மாரிமுத்து, நவநீத கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கிராம பொதுமக்கள் திமுக கட்சி நிர்வாகிகளான ஏராளமான உடன் இருந்தனர்.