தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தை சேர்ந்த 350 குடும்பங்களுக்கு 03-01-2024 புதன்கிழமை மாலை 3 மணி அளவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கிராம பொதுமக்கள் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.