புதன்கிழமை 03-01-2023 மாலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தில் வாழ்ந்து வரும் கீழஈரால் பட்டியல் சாதி அருந்தியர் மக்களுக்கு அரசு நத்தம் சர்வே எண் 324 /1,2-ல் உள்ள காலி இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி குடியிருப்புகள் கட்டி தர வேண்டும், கீழஈரால் கம்மாய் கரை கம்மாய் மற்றும் ஆகியவற்றை அகலப்படுத்தி விரிவு படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலி கட்சியின் மாரிமுத்து, முத்துராஜ், ராமகிருஷ்ணன்குருசாமி, காளிராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.