விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் பரிசுகள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஸ்ரீ அம்பாள் வித்யாலயா  பள்ளியில் கடந்த 04-11-2023 சனிக்கிழமை நடைபெற்ற  தென் மண்டல அளவிலான யோகா, சிலம்பம், பரதநாட்டிய போட்டிகளை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று  போட்டியில் முடிவில் வெற்றி பெற்ற  பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில்   பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.