நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன்ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகர் தனியார் திருமண மண்டபத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில், தேர்தலை முன்னிட்டு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து திமுக கட்சி நிர்வாகிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆலோசனைகளை வழங்கினார், இந்நிகழ்வில்  விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட திமுக ஒன்றிய பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய பேரூர் கழகப் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.