தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் மினி லோடு வேனில் ராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு விவசாயப் பணிக்கு சென்று கொண்டிருந்தபோதுஎட்டையாபுரம் சாலை தியேட்டர் ஸ்டாப் அருகே மினிவேன் முன்னாள் சென்ற தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது, இதில் மினி வேனில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்,இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு உரிய சிகிச்சைஅளிக்குமாறு மருத்துவரிடம் அறிவுறுத்தினார்.