தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பெற்றுக்கொண்டு, கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது  மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார். பின்னர் அனைவரும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக  செயலாளர் நவநீதக்கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் மதிச்செல்வி மற்றும் கிராம பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.