விளாத்திகுளம் அருகே துரைச்சாமிபுரம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கரிமூட்டத்தை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட லட்சுமணனுக்கு எம்.எல்.ஏ மார்க்கண்டையன்  நிதி உதவி வழங்கினார்தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (55) என்பவர் கரிமூட்டம் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தில் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான கரிமூட்டம்  தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனை அடுத்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கரிமூட்டத்தினை நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட லட்சுமணனுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், துரைச்சாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.