பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில், விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுவரும் பிப்ரவரி 16,17,18 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றதை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாணவிகளையும், மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்த  உடற்கல்வி ஆசிரியர்களையும் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயன் இல்லத்திற்கு நேரில் அழைத்து, எம் எல் ஏ மார்க்கண்டயேன் மாணவிகளையும் ஆசிரியரையும் பாராட்டி,வாழ்த்து தெரிவித்து பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினார்.