தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் உமறுப் புலவர்  அரசு தொழிற்பயிற்சி  நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்ப மையத்தை கடந்த ஜூலை 13ஆம் தேதி  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்இந்நிலையில் இன்று அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்,புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்ப,புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன்,விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி,புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா,மாவட்ட பிரதிநிதிகள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.