விளாத்திகுளம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்  நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான வேப்பலோடை பாண்டியாபுரம், பூசனூர், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்  நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் விறுவிறுப்பாக நடைபெற்றது,நடைபெற்ற முகாமில் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் எனஏராளமானோர் ஆர்வமுடன் உறுப்பினர்( மென்பொருள் இணைய ) படிவத்தை பூர்த்தி செய்து தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரமேஷ் குமார்  தொகுதி துணைத் தலைவர் வேம்பார் நாகராஜ்  மற்றும் வேப்பலோடை பாண்டியாபுரம் பொறுப்பாளர் சுதாகர், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை செயலாளர் பாண்டியராஜன்,  நடுவன் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.