விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் 6 வது வார்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே  94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய இறுதி கட்ட கட்டுமான பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் ,ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன்விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல்  தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.