ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டம் - எட்டயபுரம் மகாவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மகளிர் மேல்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்பதால் பாடம் எடுக்கும் மாணவர்கள்!
தற்செயல் விடுப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 30 சதவீதம் ஆசிரியர்களைக் கொண்டு மட்டும் இன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் கொண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.எட்டயபுரம் மகாவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மகளிர் மேல்பள்ளியில் போதுமான ஆசிரியர் இல்லை என்பதால் 10 வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவில்லை என்பதால் அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவி மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
அதோபோல் விளாத்திகுளம், குளத்தூர்,நாகலாபுரம், புதூர்,வேம்பார், எட்டயபுரம் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான அரசு ஆரம்பப்பள்ளிகள் இன்று பணிக்கு ஆசிரியர்கள் வராததால் பள்ளி மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.