விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபதில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலி ஒளி காட்சி செயல்பாட்டினை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில்  பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் "விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் ரூ.5.06 இலட்சம் மதிப்பீட்டில்   புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒலி, ஒளிக்காட்சியின் செயல்பாட்டினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்   தொடங்கி வைத்து பார்வையிட்டார், இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்க்கண்டேயன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மற்றும் எட்டயபுரம் வட்டாட்சியர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.