விளாத்திகுளம் தாலுகாவில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட அறங்காவல் குழுவினருக்கு நியமன ஆணை வழங்கிய MLA மார்க்கண்டேயன்! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட குளத்தூர் அருள்மிகு குழந்தை விநாயகர் திருக்கோவில், வைப்பார் அருள்மிகு விஸ்வநாதசாமி திருக்கோவில், மேல்மாந்தை அருள்மிகு கண்ணம்மாள் சத்திரம் திருக்கோவில், அருள்மிகு ஜக்கதேவி அம்மன் திருக்கோவில், குமாரசக்கனாபுரம் அருள்மிகு முனியசாமி, துர்க்கைஅம்மன், செண்பக விநாயகர் திருக்கோவில், கோடாங்கிபட்டி அருள்மிகு சக்கதேவி அம்மன் திருக்கோவில், மாதலபுரம் வில்வவன கோனேரிமாயப் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நியமன ஆணையை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் தாலுகா அறநிலையத்துறை ஆய்வாளர் முருகன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மீனாட்சியம்மன் கோவில் கணக்கர் மகாராஜன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
அறங்காவல் குழுவினருக்கு நியமன ஆணை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கால்வாய் வசதி இல்லாததால் குளம் போல காட்சியளிக்கும் சாலை!
அடுத்த
பாஜகவினர் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026