விளாத்திகுத்தில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய தேசிய பறவையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - துளசிபட்டி வைப்பாற்று கறையில் உள்ள கிணற்றில் தேசிய பறவையான 3 வயது மதிக்கதக்க ஆண் மயில் ஒன்று  விழுந்து உயிருக்கு போராடி வருவதைக் கண்ட மக்கள் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற விளாத்திகுளம் தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகாணங்களைக் கொண்டு லாபகரமாக கிணற்றில் விழுந்த மயிலை உயிரோடு பத்திரமாக மீட்டனர். பின்பு மீட்கப்பட்ட 3 வயது ஆண் மயிலை விளாத்திகுளம் வனத்துறை வேட்டை தடுப்புக்காவலர் ஜெயாபாலனிடம் ஒப்படைத்தனர்‌. மேலும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட இந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுப்பின்னர் வனப்பகுதியில் விடபடும் என வனதுறைனர் தெரிவித்துள்ளனர்.