விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு.  தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில், எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெ ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு, எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர்  ராஜ்குமார் தலைமையில் அதிமுகவினர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் தெரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் வார்டு செயலாளர் ஜெயக்குமார், சின்னத்துரை,கார்ட்டன் பிரபு ,மோகன்,கார்த்திக், சிவமாரியப்பன், மகளிர் அணி ரத்தினம், செல்வி, சாந்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்