தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சமுதாய நலக்கூட மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் ரொவினா ரூத் ஜென் கட்சி நிர்வாகிகளுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக எட்டையாபுரம் தேவர் திருஉருவசிலைக்கு வேட்பாளர் ரொவினா ரூத் ஜென் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து, எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள  பாரதியாரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டி தலைமையில் நடைபெற்றது,மேலும் தூத்துக்குடி நாடாளுமன்ற பொறுப்பாளர் ராஜசேகர்,மண்டல பொறுப்பாளர் ஆனந்த் வடக்கு மாவட்ட தலைவர் செயபாசு,எட்டயபுரம் நகர செயலாளர் வழக்கறிஞர் சதிஷ்குமார், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரமேசுகுமார்,விளாத்திகுளம் தொகுதி தலைவர் கருப்பசாமி,செய்தி தொடர்பாளர் பாலாஜி, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரவிகுமார், கோவில்பட்டி தொகுதி தலைவர் தங்கமாரியப்பன்,மண்டல மகளிரணி செயலாளர் அன்னலெட்சுமி,சுற்றுச்சூழல் பாசறை மருதம்மாரியப்பன்,சோலைகணேஷ்,செல்வகுமார்,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.