தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் பேரிலேவன்பட்டி  காசநோய் பிரிவு , வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட லெக்கம்பட்டி கிராமத்தில் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் 27-02-2024 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது, நடைபெற்ற இந்த முகாமிற்கு நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார், இந்த முகாமின் போது நடமாடும் மருத்துவக் குழுவினர், பொது மக்களிடம் காசநோய் தடுப்பது குறித்தும், சாப்பிட வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்தும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் பேரிலேவன்பட்டி அரசு ஆரம்ப  சுகாதார நிலையம் மற்றும் வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ செவிலிய பணியாளர்கள் உட்பட கிராம பொதுமக்கள்  என பலர்  கலந்து கொண்டனர்.