விளாத்திகுளத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் 70வது  அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த  கூட்டுறவு வார விழாவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மொத்தம் 157 நபர்களுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. இந்த கூட்டுறவு வார விழாவில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர்  நடுக்காட்டுராஜா, துணைப் பதிவாளர் சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் மகேஸ்வரன்கூட்டுறவு சங்க செயலாளர்கள் நாகமணி, ஆறுமுகம், ராமச்சந்திரன்,திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன்,சின்ன மாரிமுத்து,மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.