விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு !



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர்,தேன்,திருநீர்,மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட பின், ரோஜா,மல்லிகை, செவ்வரளி, மரிக்கொழுந்து, விரலி மஞ்சள் பல்வேறு வண்ணமலர்களால் மாலை அணிவிக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து பஞ்சமுக தீபாதாரணை   நடைபெற்றது,இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த  ஏராளமான பொதுமக்கள் சிவ நாமம் பாடி மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.