தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  எட்டயபுரம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் அருண்குமார் வயது (29)  கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்ய வேண்டி பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து   போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் அருண்குமாரின்   உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். பெண் கிடைக்காமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.