தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை மற்றும் புதூர் பொதுப்பணித்துறை கண்மாய் பகுதிகளில் தலைமையில், நீர்வாழ்  பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது, இந்த கணக்கெடுப்பின்போது நீர்வாழ் பறவைகளான, நீர்காகங்கள், நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து கொக்கு, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன்மஞ்சள் மூக்கு நாரை, நத்தை கொத்திநாரை , புள்ளி மூக்கு வாத்து, பாம்பு தாரா, புள்ளி மூக்கு கூலக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான நீர்வாழ் பறவைகள் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின், வன காவலர் ஜெயபாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.