விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு ஐடிஐ பயிற்சி நிறுவனத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தமிழக முழுவதும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி  தமிழ்நாடு தீயணைப்பு  மட்டும் மீட்பு பணி வீரர்கள் மூலம், பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு ஐடிஐ பயிற்சி நிறுவனத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிவீர்கள்,   வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சிகளை மாணவர   மாணவிகளிடையே தத்துருவமாக செய்து காண்பித்தனர்.