விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் : சீறிப்பாய்ந்த 50 ஜோடி மாடுகள்!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஓ. லட்சுமிநாராயணபுரம் கிராமத்தில் ஓடக்கரை முத்துசாமி திருக்கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.பூஞ்சிட்டு தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை  விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.