தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் .77வது சுதந்திரதினவிழா கொடி ஏற்றம் நிகழ்ச்சி  நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் HB  ராமலிங்கம், தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.விழாவில் பேச்சு,கவிதை,ஓவிய, மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள்  நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்  முனைவர் மகேஷ்  முனைவர் தினேஷ், பாண்டியராஜன் மாணவ மாணவிகள் அலுவலக பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குனர் முனைவர் ஆல்டிரின் அதிசயராஜ் செய்திருந்தார்.