தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தளவாய்புரம்  கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் இவரது மனைவி சோலையம்மாள் (43), இவர்களது மகள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார். இதனால் கடந்த ஒரு வரமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனவிரத்தியில் இருந்த சோலையம்மாள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.