தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, இதனைஅடுத்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் கையில் ஹிந்தி மொழியில் ராகேஷ் என பச்சை குத்தியுள்ளதாக மாசார்பட்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.