விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் ரூபாய் 11, லட்சத்தில்  78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில்  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 11, லட்சத்தி  78 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார், இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர்  சீதாராமன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.