விளாத்திகுளம் அருகே புதூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு எம்எல்ஏ  மார்க்கண்டேயன் சீதனப் பொருட்களை வழங்கினார். தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு  தமிழக அரசு சார்பில் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்   100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார், இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.