தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டி மற்றும் மேட்டுப்பட்டி கிராமம் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அரசு சார்பில் உள்ள மழை வெள்ள  நிவாரண  முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350 குடும்ப அட்டைதாரர்களுக்கு,எவர் ரினிவ் எனர்ஜி சார்பாக ரூ. 4-லட்சம் மதிப்பீட்டில் 350- குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் அன்புராஜன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்  இம்மானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.