தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த சவுரி ராஜ் மகன் ஞானபிரகாசம் (47), இவர் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவராக இருந்து வருகிறார், இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கார் பார்க்கிங் செய்ய வந்த நபருக்கும் ஞானபிரகாசத்திற்கு  ஏற்பட்ட தகராறு காரணமாக, ஞானபிரகாசத்தை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்,இதை தடுக்கவந்த ஞானபிரகாசின் உறவுக்கார பெண் புனித மேரி என்பவரையும் கையில் வெட்டியுள்ளனர். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர், இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.