கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை! 



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி  பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ செல்வ விநாயகரருக்கு மஞ்சள்,  பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ்,  செயலாளர் வேல்முருகன்,  பொருளாளர் தங்க மாரியப்பன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.