தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி ஆட்சியம்மாள் (62), இவர் சில ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வடக்குதிட்டங்குளம் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆட்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த  கொண்டிருந்த 13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.