தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை,தொப்பம்பட்டி,சொக்கலிங்கபுரம், ஓ.துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வைப்பாறில் உடைப்பு  ஏற்பட்டு விலை நிலங்கள் முழுவதும் மழை வெள்ள நீர் தேங்கியதால்   தேங்கியதால் உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட விவசாய  பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, தொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள்  கையில் பதித்த உளுந்த செடிகளோடு வந்து, விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதித்த விளைநிலங்களை முறையாக ஆய்வு செய்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று  விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனார்.