தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த  பால்ராஜ் என்பவரின் மகன் முத்து பிரகாஷ் (24) முத்து பிரகாஷ் கூலி வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது  ஆற்றுப்பாலம் மேம்பாலத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், முத்து பிரகாஷ் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார், இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.