தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் மணிகண்டன் (21), மணிகண்டன் சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், இதனால் மணிகண்டனை தாய் மஞ்சுளா வேலைக்கு செல்லுமாறு கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில்   இருந்த மணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் உள்ள பனைமர சட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார்,மணிகண்டனின் உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.