தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மனைவி முத்துச்செல்வி (25),  23-01-2024 செவ்வாய்க்கிழமை  முத்துச்செல்வியை அதே கிராமத்தை சேர்ந்த சத்தியா, முத்துக்குமார், மதுலட்சுமி, முனியசாமி,அஜித் குமார் ஆகிய 5 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதால் மனவிரத்தியில்  முத்துச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து முத்து செல்வியின் கணவர் முனியசாமி குளத்தூர் (பொறுப்பு) ஆய்வாளர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தும், ஆய்வாளர் விஜயலட்சுமி, சத்தியா, முத்துகிருஷ்ணன், முதுலட்சுமி, முனியசாமி, அஜித்குமார் ஆகிய 5 பேருக்கும் ஆதரவாக வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதால், தற்போது  24-01-2024 புதன் கிழமை இரவு வரை தூத்துக்குடி அரசு மருத்துவமனை யில் உயிரிழந்த முத்துச்செல்வியின் கணவர் மற்றும் உறவினர்களுடன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முத்துச்செல்வியின் கணவர் முனியசாமி நானும் திமுக தொண்டர்தான், நானும் உங்களுக்கு தான் ஓட்டு போட்டு உள்ளேன், எனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முனியசாமி கோரிக்கை வைத்துள்ளார்.