தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற சர்க்கரை இவரது மனைவி முத்துலட்சுமி (32), இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமிக்கும் கணவர் ரமேஷு என்ற சர்க்கரைக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 14-5- 2024 அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது  முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய போலீசார், முத்துலட்சுமி உடலை மீட்டு  விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.