தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏட்டையா என்பவரின் மனைவி முத்துமாடத்தி(50),  இவர் கடந்த 07-05-2024 அதிகாலை வீட்டின் வெளியே தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாம்பு  கடித்து முத்துமாடத்தி அலறியுள்ளார், இதனை அடுத்து கணவர் ஏட்டையா மற்றும் அருகில் உள்ளோர் வாகனத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், முத்துமாடத்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.