விளாத்திகுளத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் "வாக்காளர் விழிப்புணர்வு பேரணி" : நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்த இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டையபுரம் ரோடு, பேருந்து நிலையம், மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
மேலும் இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தவசுமுத்து, தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் உட்பட வருவாய் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விதவை உதவி தொகை வழங்க அமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டி!
அடுத்த
நுண்கதிர்வீச்சு மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் திறந்து வைத்தார்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026