விளாத்திகுளத்தில்,  அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் "வாக்காளர் விழிப்புணர்வு பேரணி" : நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்த இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டையபுரம் ரோடு, பேருந்து நிலையம், மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. மேலும் இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தவசுமுத்து, தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் உட்பட வருவாய் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.